TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 10 நாட்கள் மட்டுமே!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இன்னும் 10 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - இன்னும் 10 நாட்கள் மட்டுமே!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – இன்னும் 10 நாட்கள் மட்டுமே!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்கள் (ஏப்ரல் 28) மட்டுமே உள்ளன. அதனால், தேர்வுக்கு தயாராவோர் விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் என TNPSC தெரிவித்து உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையானவர்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல போட்டி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. இதை அடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பதவி உயர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள், அலுவலர்களை தேர்ந்தெடுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் 2 முறை துறைத்தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 ஆகிய வகைகளில் போட்டித்தேர்வு நடைபெற்று வருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சனிக்கிழமை தோறும் விடுமுறை!

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. தமிழகத்தில் கொரோனா எழுச்சி காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்த ஒரு போட்டிதேர்வுகளும் நடைபெறவில்லை. பல்வேறு தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் தற்போது நிலை சீராக்கி வருவதால் அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 23 தேதியுடன் கால அவகாசம் முடிந்தது.

இதனை அடுத்து குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் 29ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 28ம் தேதி ஆகும். இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024 என 7138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கான 81 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. நேற்று மாலை வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது என TNPSC தலைவர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!