Central Bank of India வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கிளைகளை மூட முடிவு!
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13% வங்கிக் கிளைகளை மூட முடிவு செய்துள்ளது. அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்வது பற்றியும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா:
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13% வங்கிக் கிளைகளை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றினால் தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இத்தகைய சூழலில் அனைத்து துறைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மற்ற துறைகளை தொடர்ந்து வங்கிதுறையும் சரிவை சந்தித்தது. இந்நிலையில், நிதி நிலையை மேம்படுத்துவதற்காக பேங்க் ஆஃப் இந்தியா 13% வங்கிக் கிளைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளை மூடுவது மட்டுமல்லாமல் அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்வது பற்றியும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு நாடு முழுவதும் 4,594 கிளைகள் உள்ளன. மேலும் பல பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை மோசமாக இருப்பதாகவும், வாராக் கடன்கள் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்தில் 2017ஆம் ஆண்டில் அந்த வங்கிகள் வந்தன.
ரூ.23,000/- ஊதியத்தில் WIPRO நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்..!
மற்ற வங்கிகள் காலப்போக்கில் நிதி நிலையை மேம்படுத்தி விட்டன. ஆனால், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் நிதி நிலை மட்டும் மேம்படாமல் தொடர்ந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், கிளைகளை மூடவும், சொத்துகளை விற்கவும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.