விஜய் டிவி “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் நடந்த பெரிய திருப்பம் – ப்ரியாவிடம் பொய் சொன்ன ஜீவா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த வெற்றி சீரியலான “ஈரமான ரோஜாவே” சீரியலின் இரண்டாம் பாகம் பல திருப்பங்களுடன் மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ஜீவா ப்ரியாவிடம் பெரிய பொய் ஒன்றை சொல்ல போகிறார்.
ஈரமான ரோஜாவே 2:
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் விதியின் மாற்றத்தால் ஜீவா ப்ரியாவையும், காவ்யா பார்த்திபனையும் திருமணம் செய்து கொண்டனர். அதனால் இரண்டு ஜோடிகளும் திருமண பந்தத்திற்குள் போக முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் பார்த்திபன் காவ்யா உடன் நெருக்கமாக முயற்சி செய்கிறார். ஆனால் காவ்யா அதற்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் இருக்கிறாள். காவ்யா பார்த்திபனை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் ப்ரியா பல வேலைகளை செய்து ஜீவாவை இம்பிரஸ் செய்ய நினைக்கிறார். ஆனால் ஜீவா அதற்கெல்லாம் வழி விடாமல் தினமும் குடித்துவிட்டு வருகிறார். அதை நினைத்து ப்ரியா மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். தற்போது காவ்யா விவாகரத்து செய்ய நினைப்பது தெரிந்து ஜீவா அதிகமாக குடித்துவிட்டு போலீசில் மாட்டிக் கொள்கிறார். அப்போது ப்ரியா வந்து ஜீவாவை காப்பாற்றுகிறார். அதன் பின் ஜீவா மனதில் என்ன இருக்கிறது என கேட்கிறார்.
திடீரென மரணத்தை தழுவிய ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியாக பெருமூச்சு விட்ட கோபி! ப்ரோமோ ரிலீஸ்!
ஆனால் ஜீவா நான் ஒரு பெண்ணை காதலித்ததாக சொல்ல அதை கேட்டு ப்ரியா அதிர்ச்சி அடைகிறார். அந்த பெண் யார் என்ற உண்மையை ஜீவா ப்ரியாவிடம் சொல்லமாட்டார், மேலும் நான் ஒருதலையாக தான் காதலித்தேன் என ஜீவா ப்ரியாவிடம் பொய் சொல்கிறார். ஜீவாவின் முடிவில் தான் ப்ரியா இந்த வீட்டில் இருப்பாரா மாட்டாரா என முடிவு செய்வேன் சொன்னது குறிப்பிடத்தக்கது. மேலும் காவ்யா பார்த்திபனை விவாகரத்து செய்வாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.