ஒன்றாக ஒரே சீரியலில் நடிக்கும் ஆர்யன், ஷபானா – உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் ஒன்றாக ஒரே சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் குறித்து தற்போது இவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒரே சீரியல்:
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக மத்தியில் அதிகம் அறியப்படும் நடிகராக இருப்பவர் ஆர்யன். ஆனால் இவர் திடீரென்று பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரையும் பற்றி சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஏதேனும் ஒரு வதந்தி பரவி வரும். அதையும் இந்த ஜோடியின் எளிதாக கடந்து சென்று கெத்து காட்டி வருகின்றனர்.
இவர்களின் திருமணம் ஆன சமயத்தில் விவகாரத்தி செய்யப்போகிறார்கள் என்றும், பிரிந்து விட்டார்கள் என்றும் பல வதந்திகள் வெளியானது. அதற்கு இவர்கள் தரப்பில் இருந்து விளக்கம் அளித்த பின்னர் தான் அந்த செய்தி ஓய்ந்தது. அதேபோல், தற்போது ஆர்யன் மற்றும் ஷபானா இருவரும் ஒன்றாக ஒரே சீரியலில் நடிக்க இருப்பதாகவும், அதனால் தான் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் இவர்களது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து ஆர்யனிடம் ஒரு தனியார் சேனல் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அப்படி ஏதும் இல்லை என்றும், தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் ஆர்யன் மற்றும் ஷபானா பற்றிய இந்த வதந்தியும் முடிவிற்கு வந்துள்ளது. இதனால் அவர்களது ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.