குழந்தைக்காக கதிருக்கு வேறு திருமணம் செய்து வைக்கும் குடும்பத்தினர் – கேள்விக்குறியாகும் முல்லையின் நிலை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் முல்லை குழந்தை விஷயம் தான் பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லாததால் குடும்பத்தினர் விபரீத முடிவு ஒன்றை எடுக்கின்றனர்.
கதிருக்கு திருமணம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் ஒரு குடும்ப சீரியல் ஆகும். இதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரும் நடிப்பை மீறி உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருப்பதாவே தோன்றும். அந்த அளவிற்கு கதையுடன் ஒன்றிய நடிப்பை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் கதிர் மற்றும் முல்லை இருவருக்கும் குழந்தை இல்லை என்ற கவலை அதிகரித்து வந்தது. மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில் முல்லை இயற்கையாக கர்ப்பமாக வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர்.
அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் ஷோவின் வின்னர் இவர் தான் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இதனால் முல்லை மொத்தமாக நொறுங்கி போய் விட்டார். இதனால் கதிரிடம் இருந்து பிரிந்து விட முடிவு செய்து விடுகிறார்.இதனால் குடும்பத்தினரிடம் கதிருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் படி கேட்கிறார். குடும்பத்தினர் முல்லையின் முடிவால் அதிர்ச்சி அடைகின்றனர். கதிர் இதற்க்கு முடியவே முடியாது என்று கூறி விடுகின்றனர். ஆனால் தனம் உட்பட அனைவரும் மிகவும் கெஞ்சுவதால் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார்.
இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக ஒரு கதாபாத்திரம் அறிமுகம் ஆக உள்ளது. இறுதியாக கதிருக்கு திருமணம் நடைபெறும் நாளும் வந்து விடுகிறது. அதனை தாங்கி கொள்ள முடியாமல் முல்லை மிகவும் வேதனை படுகிறார். ஆனால் கதையில் புதிய திருப்பம் ஏதேனும் நடந்து இந்த திருமணம் நின்று விடுமா அல்லது திருமணம் நடந்த பின்னர் மாற்றங்கள் நடக்குமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.