“செம்பருத்தி” சீரியல் ஷபானா ஆர்யன் லைவில் கேட்ட குழந்தை சத்தம் – குழப்பத்தில் ரசிகர்கள்!
ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியல் கதாநாயகி ஷபானா திருமண வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் வந்தாலும் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில், இன்ஸ்டா லைவில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கின்றனர்.
ஷபானா, ஆரியன்:
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ஷபானா கடந்த மாதம் விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இருவரும் வேறு மதம் என்பதால் பல வதந்திகள் கிளம்பியது. ஆர்யன் வீட்டில் இருவரின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஷபானாவை விட்டு விலக சொல்லி மிரட்டுவதாக செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. ஆனால் இது பற்றி அந்த காதல் ஜோடிகள் எந்த பதிலும் அளிக்காமல் மௌனமாக இருந்தனர்.
தனியாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – ட்ரெண்டான வீடியோ!
மேலும் பல இடங்களுக்கு சென்று அங்கே புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்நிலையில் ஷபானா ஆர்யன் தங்களது இரண்டாவது மாத திருமண நாளை பதிவு ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். அதனால் அவர்கள் விவாகரத்து வாங்கவில்லை என ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அதனை தொடர்ந்து இருவரும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு லைவில் பேசினார்கள். தொடக்கத்தில் குழந்தை பற்றி ரசிகர்கள் கேட்க, அப்போது குழந்தை சத்தம் போல பின்னணியில் கேட்கிறது.
திருமணத்திற்கு பிறகு ‘செம்பருத்தி’ ஷபானாவின் புதிய தோற்றம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் அது அவர்களின் செல்லப்பிராணி பூனை என விளக்கம் அளித்து இருக்கின்றனர். மேலும் ஆர்யனை விரைவில் வெள்ளித்திரை படங்களில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். அது போக வேறு மத திருமணத்தை எப்படி எதிர் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு, நீங்க சொன்ன பின்னால் தான் நான் இருவரும் வேறு மதம் என்பதை உணர்ந்தோம் என பதில் அளித்து இருக்கிறார். அடுத்து குட்டி ஆர்யன் எப்போது என்ற கேள்விக்கு எங்களை விட மிகவும் ஆர்வமாக இருக்கீங்க போல என சிரித்துக் கொண்டே பதில் அளித்து இருக்கிறார்.