தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் – உயர்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் கல்லூரிகளின் வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட நிலையில் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் உயர்கல்வித்துறை இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ல;வி நிலையங்களில் கடந்த ஆண்டு முதல் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்வதறகான நெறிமுறைகளையும் வெளியிட்டு அதனை கடைபிடிக்க அறிவுறுத்தியது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் மட்டுமே நடந்து வந்தது.
தமிழகத்தில் நவ.17ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் பாதிப்புகள் குறைந்த பின்னர், நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதி முதல் முதுகலை, இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழக உயர்கல்வித்துறை கல்லூரியின் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் இனி நேரிடையாக மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்தது.
சென்னையில் CSK அணியின் வெற்றி விழா – முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் மாதம், தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டிய சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.