தமிழகத்தில் நவ.17ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 17 ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அன்றைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின் தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டும் வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின் தடை தேதியை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.
சென்னையில் CSK அணியின் வெற்றி விழா – முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்பு! ரசிகர்கள் குஷி!
மின் பராமரிப்பின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு சரி செய்யப்படுகிறது, ஏதேனும் வயர்கள் இணைப்பு சரியாக இல்லாவிட்டால் அவை உடனடியாக சரி செய்யப்பட்டு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் மின் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது.மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை திருச்சியில் உள்ள நீதிமன்ற துணை மின் நிலையத்தில் நாளை (17.11.2021) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மலைப்பாதை மூடல்!
அதனால் வார்னாஸ் சாலை, பாரதிதாசன், லாசன்ஸ், ரெனால்ட்ஸ் சாலைகள், கண்டோன்மெண்ட், பீமநகா், ஹீபா் சாலை, கூனி பஜார், புதுத்தெரு, கண்டித்தெரு, மாா்சிங்பேட்டை, வாலாஜா பஜார், வயலூர் சாலை, புத்தூா் வண்ணாரப்பேட்டை, அரசு மருத்துவமனை, ஆபீசர்ஸ் காலனி, பாரதி நகர், பிஷப் ஹீபர் கல்லூரி பகுதி, குமரன் நகர், தென்னூர் உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.