திருப்பதி ஏழுமலையான் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மலைப்பாதை மூடல்!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இதுவரை பக்தர்களுக்கு தினசரி தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கனமழையின் காரணமாக பாதயாத்திரை செல்லும் மலைப்பாதை மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலைப்பாதை மூடல்:
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் உலங்கெங்கும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்யும் அளவிற்கு புகழ் பெற்ற சிறந்த கோயில் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் கோயில் திறக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் கட்டுப்பாடுகளுடன் தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
சபரிமலை தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? கூடுதல் பக்தர்கள் அனுமதி!
அதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேரடி டோக்கன் முறை தடை செய்யப்பட்டு ஆன்லைன் டோக்கன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்குமாறு உத்தரவிடபட்டது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி சான்று அல்லது கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் தேவஸ்தானத்தில் சமர்ப்பிக்குமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நவ.19 அன்று நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு – 580 ஆண்டுகளுக்கு பிறகான மிக நீண்ட சந்திர கிரகணம்!
தற்போது ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் பாதயாத்திரை செல்லும் மலைப் பாதையை நாளையும், நாளை மறுநாளும் மூடவுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் பக்தர்கள் யாரும் பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.