ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ் – ட்ராக் மாறும் கதைக்களம்!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி தொடரின் கதைக்களம் தற்போது வேறு ட்ராக்கில் பயணித்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் பலரும் தயவு செய்து சீரியலை முடித்து விடுங்கள் என கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
செம்பருத்தி சீரியல்:
ஜீ தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த சீரியல் இதுவரை 1300-க்கும் மேற்பட்ட எபிசோட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் செம்பருத்தி தொடர் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆதி கதாபாத்திரத்தில் அக்னியும், பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்து கொண்டிருந்தார். கார்த்திக் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியதுமே சீரியல் அவ்வளவாக வரவேற்ப்பை கொடுக்கவில்லை.
பின்பு, நாளடைவில் ஆதி கதாபாத்திரத்தில் அறிமுகமான அக்னியையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆதி அகிலாண்டேஸ்வரியையும் மீறி பார்வதியை திருமணம் செய்து கொண்டார். பின்பு நாளடைவில் ஆதியையும், பார்வதியையும் அகிலாண்டேஸ்வரி ஏற்றுக்கொண்டார். அகிலாண்டேஸ்வரி இருவரையும் ஏற்று கொண்டதுமே சீரியல் முடிவடைய போவதாக தகவல் வெளியானது. ஆனால், அது மாதிரியான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. தற்போது செம்பருத்தி சீரியலில் புவனேஸ்வரி குடும்பம், அவர் வளர்ந்த விதம் என சீரியலை வேறு ட்ராக்கில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமல்லாமல் சீரியலில் யமுனா, ப்ரீத்தா, நடிகர் விஷ்ணு ஆகிய நடிகர்களும் புதிதாக சீரியலில் என்ட்ரியாகியுள்ளனர். அவசியமே இல்லாமல் ஏதேதோ காட்சிகளை காட்டி கொண்டிருப்பதாக ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். தயவு செய்து விரைவில் சீரியலை முடித்து விடுங்கள் என கண்டபடி செம்பருத்தி சீரியலை ரசிகர்கள் திட்டி தீர்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு பிறகாவது சீரியலை இன்ட்ரெஸ்ட்டாக கொண்டு செல்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.