சாப்ட்வெர் செய்ய மூர்த்தியிடம் பணம் கேட்ட மீனா, முல்லையிடம் மன்னிப்பு கேட்ட ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் பெரிய கலெக்டர் ஆக வேண்டும் என ஐஸ்வர்யா ஆசைப்பட அதை கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். பின் மீனா சாப்ட்வெர் வாங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறார். ஆனால் மூர்த்தி பணம் இல்லை என சொன்னதால் முல்லைக்கு பணம் கொடுக்க முடிந்தது என குத்தி காட்டி பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ரிசல்ட் வந்ததும் வேலை தேட தயாராக இரு என தனம் சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா கண்ணன் குரூப் 1 தேர்வு எழுத இருப்பதாக சொல்கிறார். கண்ணன் பெரிய அரசு அதிகாரி ஆனால் அண்ணன் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா என தனம் சொல்ல, கண்ணன் இவள் இப்படி ஒரு திட்டத்தில் இருக்கிறாள் என்பதே எனக்கு இப்போது தான் தெரியும் என கண்ணன் சொல்கிறார். ரிசல்ட் வரட்டும் எல்லா குரூப் தேர்வுகளையும் அப்ளே செய்து கண்டிப்பாக கண்ணனை கலெக்டர் ஆக்க வேண்டும் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மீனா இனி எல்லாம் நைட் படிப்பு தான என கேட்கிறார். கண்ணன் இதெல்லாம் கேட்டால் இப்பவே வயிறு கலக்குவதாக சொல்கிறார். பின் கண்ணனும் ஐஸ்வர்யாவும் கடைக்கு கிளம்புகின்றனர். மீனா நீண்ட நேரமாக கடைக்கு தேவையான சாப்ட்வெர் விவரங்களை எழுதி கொண்டே இருக்கிறார். அப்போது மூர்த்தியும் ஜீவா கதிர் கடையில் இருந்து வருகின்றனர். தனம் மீனா காலையில் இருந்து எல்லாம் எழுதுவதாக சொல்கிறார் . அதை கேட்டு மூர்த்தி சந்தோசப்படுகிறார்.
இன்னும் 2 நாட்களில் சாப்ட்வெர் தயாராகிவிடும் ஆனால் அவனுக்கு சிறிது பணம் கொடுக்க வேண்டும் என மீனா சொல்ல, அப்போது மூர்த்தி எவ்வளவு பணம் என கேட்கிறார். ஓரு 15000 ரூபாய் என சொல்ல அப்போது மூர்த்தி அவ்வளவு பணமா என கேட்கிறார். அது தான் கம்மியாக பேசியிருக்கேன் மற்ற இடங்களில் 50000 ரூபாய்க்கு மேல் கேட்பார்கள் என சொல்கிறார். உடனே பணம் கொடுக்க வேண்டுமா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என மூர்த்தி சொல்ல, ஜீவா உனக்கு தெரியுமே நீ சொல்லு என மீனா சொல்கிறார். ஆமாம் அண்ணா சாப்ட்வெர் செய்தால் செலவாகும் என சொல்ல, நீ இதைவிட கம்மியா யாரவது செய்தால் சொல்லு என மூர்த்தி சொல்கிறார்.
அதை கேட்டு கோவப்பட்ட மீனா நான் எல்லாம் செய்துவிட்டேன் அவனும் வேலையை தொடங்கிவிட்டான் இப்போது வேண்டாம் என சொன்னால் என்ன ஆகும் எனக்கு மட்டும் பணம் கேட்டால் இந்த வீட்டில் அது பிரச்சனையாக இருக்கும் நேற்று ஐஸ்வர்யா சம்பளம் கேட்டதும் கொடுத்தீர்கள், முல்லைக்கு 5 லட்சம் செலவு செய்து டிரீட்மென்ட் பார்த்தீங்கள் ஆனால் எனக்கு மட்டும் ஏன் பணம் கொடுக்க இவ்வளவு யோசனை, இப்படியே சென்றால் கயலின் எதிர்காலம் என்ன ஆகும் என கேட்கிறார். மீனா பேசியதை கேட்டு முல்லை வருத்தப்படுகிறார்.
பாரதியை நினைத்து பெருமைப்படும் குடும்பத்தினர், திருமணத்தை நிறுத்த சொல்லும் வெண்பா – இன்றைய எபிசோட்!
பின் முல்லை தனியாக வருத்தப்பட கதிர் வருகிறார். அப்போது நான் தேவை இல்லாத வேலைகளை செய்ததால் தான் எனக்கு பணம் செலவு செய்து இவ்வளவு பிரச்சனை என வருத்தப்பட அப்போது ஜீவா வருகிறார். ஜீவா மீனா எதோ தவறாக பேசிவிட்டால் என சொல்கிறார். அப்போது ஜீவா மன்னிப்பு கேட்க ஆனால் முல்லை பரவாயில்லை என சொல்கிறார். பின் தனம் அடுப்படியில் இருக்க அப்போது மீனா பால் எடுக்க வருகிறார். அப்போது மீனா நான் சொல்வது எல்லாம் சரி தான் கயலை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா கயல் காலத்தில் திருமணம் இருக்குமா என்பதே சந்தேகம் இவங்க என்ன இப்படி பேசுகிறார்கள் என சொல்கிறார். தனம் மீனாவை நினைத்து வருத்தப்படுகிறார்.