‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் ராஜ் நடிக்கும் திரைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'செம்பருத்தி' சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் ராஜ் நடிக்கும் திரைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
'செம்பருத்தி' சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் ராஜ் நடிக்கும் திரைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் ராஜ் நடிக்கும் திரைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் ராஜ் கே ஸ்டுடியோஸ் என்கிற தனது சொந்த தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கானா காணும் காலங்கள்’ என்ற சீரியல் மூலம் ஒரு நடிகராக சின்னத்திரை உலகிற்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். இந்த சீரியலை தொடர்ந்து இவரது நடிப்பில் உருவான ‘ஆபிஸ்’ சீரியல் நடிகர் கார்த்திக் ராஜுக்கு பெருமளவு ரசிகர்களை சம்பாதித்து தந்தது. இருந்தாலும் சின்னத்திரையில் ஒரு சிறிய பிரேக் எடுத்த கார்த்திக் ராஜ் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் மீண்டுமாக கதாநாயகனாக தோன்றினார்.

விஜய் டிவி “அரண்மனை கிளி” ஜானு மோனிஷா யார் தெரியுமா? குடும்ப வாழ்க்கை டூ சீரியல் நடிகை!

இந்த சீரியல் இவருக்கு எக்கச்சக்க வரவேற்புகளை பெற்றுத் தந்தது. குறிப்பாக ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதி – பார்வதி ஜோடிக்கு பெருமளவு ரசிகர்கள் உருவானார்கள். என்றாலும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த 2020ம் ஆண்டு இத்தொடரில் இருந்து விலகினார் நடிகர் கார்த்திக். பிறகு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர், ‘முகிலன்’ என்ற வெப் தொடர் ஒன்றில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த வெப் தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது முழுக்க முழுக்க சினிமாவில் ஈடுபட்டு வரும் நடிகர் கார்த்திக் ராஜ், கே ஸ்டுடியோஸ் என்கிற தனது சொந்த தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, தன்னை திரைப்படங்களில் நடிக்க விடாமல் சிலர் அச்சுறுத்தி வருவதாகவும், படம் எடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்போது சினிமாவில் ஏற்பட்ட சில ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் ரசிகர்களின் உதவியுடன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கும் நடிகர் கார்த்திக், தனது திரைப்படத்துக்கான முதல் ஷெட்யூலைத் தொடங்கி இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் குழந்தை புகைப்படம் – கணவர் வெளியிட்ட பதிவு!

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ள நடிகர் கார்த்திக், ‘எனது திரைப்படத்தின் முதல் ஷெட்யூலை துவங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்த திரைப்படத்தை முழுமையாக முடிக்க நீங்கள் தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்’ என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!