தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.20) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் கரம்பயம் துணை மின் நிலையத்தில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
கொரோனா காலத்தில் எந்தவித முன்னறிவிப்பும் வழங்கப்படாமல் மின்தடை செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து புகார்கள் குவிந்து வந்ததால் தமிழகம் முழுவதும் மின்சாரத் துறைக்கு வரும் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் கவலை!
கடந்த ஆட்சிக்காலத்தில் மின்சாரத் துறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் மின் கம்பிகள், கம்பங்கள் எவ்வித பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் களப்பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படுகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை மறுநாள் கரம்பயம் துணை மின் நிலையத்தில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
மதுரையில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
எனவே மின் பராமரிப்பு பணியாளர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மின்தடை குறித்த விவரங்களை அறிந்துகொள்ள பொதுமக்கள் 1912 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என பட்டுக்கோட்டை மின் வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:
- ஆலத்தூா்
- பாப்பாநாடு
- கிளாமங்கலம்