கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்! நகைப்பிரியர்கள் கவலை!
சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை உயர்வினால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கொரோனா தொற்று பாதிப்பினால் பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து வணிக தொழில் நிறுவனங்களும் கடும் பாதிப்பை சந்தித்தது. தொழில் துறையில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்தனர். எனவே பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் போன்ற முதலீடுகளை தவிர்த்து தங்கத்தின் மீது அதிகம் முதலீடு செய்ய தொடங்கினார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு! தெரிந்து கொள்வது எப்படி?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அது, தங்கத்தின் விலையை பாதிக்க தொடங்கியது. இதனால் தங்கத்தின் விலையில் அதிக ஏற்ற, இறக்கங்கள் நிலவியது. நேற்றைய காலை சந்தை நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.272 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ. 4,625க்கும் விற்பனையானது. சென்னையில் சில்லறை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 71க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை குறைவால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
மதுரையில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
ஆனால் இன்று மறுபடியும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, வணிக சந்தையின் காலை நேர நிலவரப்படி மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.37,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.4,634-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.