தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு! தெரிந்து கொள்வது எப்படி?
தமிழகத்தில் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மானவர்களுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக கடந்த ஆண்டு அனைத்து பொதுத் தேர்வுகளுக்கும் ரத்து செய்யப்பட்டன. அதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது உயர்கல்வியை தொடரும் வகையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களது செய்முறைத்தேர்வு, மதிப்பீடு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மதுரையில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
ஆனால் துணைத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 16ம் தேதி துணைத்தேர்வு தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. தற்போது இந்த தேர்வின் முடிவானது நவ.19ம் தேதி அதாவது நாளை வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் 10ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
அதாவது www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification SSLC Examination Provisional mark Sheet SSLC Result Sep 2021 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவ.22 மற்றும் 23 ஆகிய இரு தினங்களில் உரிய முதன்மை கல்வி அலுவலகத்தில் மறுகூட்டலுக்கான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.