மதுரையில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
மதுரை மாவட்டத்தில் நாளை (18.11.2021) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அதனால் ஊரடங்கு உத்தரவினால் வேலை இழந்தோர் மீண்டும் பணிக்கு செல்ல முயன்று வருகின்றனர். பொதுமுடக்க கட்டுப்பாடுகளினால் தொழில்கள் முடங்கியதால் ஏராளமான மக்கள் வேலையிழந்து மிகவும் சிரமப்பட்டனர். அப்போதைய நிதி நெருக்கடியில் நிறுவனங்களால் தங்களின் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தற்போது மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதால் மக்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் தனியார் நிறுவனங்கள் மக்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்க முன்வந்துள்ளனர். அதனால் கொரோனாவால் தடை செய்யப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
நவ.19 (நாளை) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
நாளை (18.11.2021) மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மதுரை மாவட்டம் கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். மேலும் வேலை தேடுபவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் சுய விவரங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.