தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் வாரமே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் தமிழக முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதற்காக பெற்றோரும், மாணவர்களும், பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் எதிர்ப்பு:
தமிழகத்தில் கடந்த 2 வருட காலமாகவே பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொரோனா நோய் தாக்கம் குறைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொதுத்தேர்வையும் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக பணியை மேற்கொண்டது. அந்த வகையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாத தொடக்கத்திலே பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் நலன் கருதி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடைபிடிக்க தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 31ஆம் தேதியுடன் தேர்வு நிறைவடைகிறது. இந்த வகையில் தேர்வு முடிந்த உடன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கு செல்கிறார்கள். இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜூன் 17 முதல் தொடங்க உள்ளன. இதனால் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கிடையாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதன் அடிப்படையில் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசின் முந்தைய உத்தரவின் பேரில் 1 முதல் 9ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற வேண்டும். கடந்த 2 ஆண்டு காலத்தில் கொரோனா நோய் காரணமாக ஏராளமான நாட்கள் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் படித்தால் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. எனவே அரசு அறிவித்தபடி காலதாமதமின்றி உடனடியாக வரும் கல்வியாண்டு பள்ளியை தொடங்கிட வேண்டும். மேலும் சில ஆசிரியர் சங்கங்கள் கோடை விடுமுறை இன்னும் வேண்டும் என்று கேட்பது வேதனையாக இருக்கிறது என தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்க பொதுச்செயலர் நந்தகுமார், பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.