தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதாவது தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி ஊழியர்கள் கோஷமிட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு ஊழியர்கள் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் மக்களுக்கு இடைவிடாது மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று அச்சத்திலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தனர். இதனால் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதாவது அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். 2004ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை பல ஆண்டுகளாக ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் இவர்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது ஊழியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க., தேர்தல் அறிக்கையின்படி புதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர். தற்போது அரசுக்கு உள்ள நிதி நெருக்கடியில் பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.