தமிழகத்தில் காலை 7.30 மணிமுதல் 12.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் காலை 7.30 மணிமுதல் 12.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் காலை 7.30 மணிமுதல் 12.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் காலை 7.30 மணிமுதல் 12.30 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிக அளவு வெயிலின் தாக்கம் உள்ளது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். எனவே மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி நேரம் மாற்றக் கோரி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத் தலைவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

பள்ளிகள் நேரம் மாற்றம்:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களில் சரியாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தான் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்றது. தற்போது தாக்கம் படிப்படியாக குறைந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது நடைமுறையில் உள்ளவை ஆகும். இருப்பினும் தற்போது ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் அதிகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பள்ளியின் நேரத்தை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அவர் அனுப்பிய மனுவில், கடந்த வருடங்களை விட வெயிலின் உக்கிரம் இந்த வருடம் கூடுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்போதே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. மேலும் கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் காலை 8 மணி முதல் 11:30 மணி வரை குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். இந்த வெயிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பாதுகாக்கும்படி முதலமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!