மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதத்தில் DA நிலுவைத்தொகை? முழு விவரம் இதோ!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் சேர்த்து DA உயர்வு மற்றும் DR நிலுவையை கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
DA நிலுவைத்தொகை
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (DR) 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தில் 34 சதவீதமாக அகவிலைப்படி (DA) இருக்கும். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த புதிய கட்டணங்கள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக ஊடக அறிக்கைகளை நம்பினால், அதிகரித்த DA அதாவது 34 சதவிகிதம் ஏப்ரல் மாத சம்பளத்தில் கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறது. மேலும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2022 ஆகிய மூன்று மாதங்களின் DA நிலுவைத் தொகையும் ஏப்ரல் மாத சம்பளத்தில் கிடைக்கலாம். இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு, கொரோனா தொற்றுநோய் தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட DA நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. இருப்பினும், ஏப்ரல் மாத சம்பளத்தில் 3 தவணைக்கான நிலுவைத்தொகையும் கிடைக்கலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். அந்த வகையில் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 என்றால் 31 சதவீத விகிதத்தில் அவர் இதுவரை ரூ.5,580 DA தொகையை பெற்று வந்தார். சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, ஒரு ஊழியருக்கு ரூ.6,120 DA கிடைக்கும். அதாவது 3 சதவீத அதிகரிப்பால் சம்பளத்தில் ரூ.540 உயர்வு இருக்கும். இப்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 47 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 68 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவார்கள் என்றும் இதன் மூலம் அரசின் கருவூலத்தில் ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி செலவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.