தமிழகம் முழுவதும் பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, பள்ளிகள் செயல்படும் நேர மாற்றங்கள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சில அறிவிப்புகளை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு
பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மேலும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 12ம் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். அதன்படி மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விபரங்கள்!
தமிழ் வழியில் படிக்கும் மற்றும் படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் தமிழ் வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு மிகுந்த அலைச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இனி சான்றிதழ்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைனில் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.