தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் முழு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா நான்காம் அலை தொடங்கி உள்ளது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் 2ம் அலை சற்று ஓய்ந்த பின்பு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்றன. மேலும் நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்திலே கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி, கொரோனா மூன்றாவது அலை தலைதூக்கியது. மேலும் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு, தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கின. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் மே மாதம் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை அடுத்து பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று இரட்டை இலக்கங்களில் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி. தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும்.
தமிழகத்தில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
அது போல் மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே மாதம் 13 ஆம் தேதி கடைசி வேலை நாள் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், மேற்கண்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித் துறை பரிசீலிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.