தமிழகத்தில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசாணை வெளியீடு!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓய்வு வயது:
1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 55 லிருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. இதன் பின்பு 2020 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது ஓய்வு வயது மீண்டும் 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயது அதிகரித்து நல்ல செய்தியாக இருந்தாலும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதாவது எக்கச்சக்கமான இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஓய்வூதிய வயதை அதிகரிப்பதால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு யாருமே ஓய்வு பெற மாட்டார்கள். இதனால் ஒரு ஆண்டு காலமாக அரசு பணியில் எந்த ஊழியர்களும் புதிதாக சேர முடியாது. இதனால் மீண்டும் ஓய்வு வயதை குறைக்கும் படி பல கோரிக்கைகள் வந்தபடி இருந்தன. மேலும் இந்த அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என குழப்பத்தில் உள்ளனர்.
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – மே 17 கடைசி நாள்!
இது குறித்து அரசுக்கு விளக்கம் கேட்டு பல அரசு ஊழியர்கள் கடிதங்கள் அனுப்பினர். இதற்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட்ட அரசாணை 92 ன் படி ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதன் அடிப்படையில் பல்வேறு துறைகள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து 60 வயதை எட்டும் தேதியை மட்டும் எடுக்காமல் அந்த மாதத்தின் இறுதி நாள் வரை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.