தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இறுதி தேர்வு
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். 1ம் வகுப்பு முதல் 12ம் மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு திறன் குறைவாக உள்ளது. கொரோனா குறைந்த நிலையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
அதன்படி,10,11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் முழுவதும் முடிக்கப்படாத காரணத்தால் பாட சுமையை குறைத்து நடத்தப்பட்ட பாடப்பகுதிகளில் மட்டும் பொது தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி, பொது தேர்வு அறிவிக்கப்பட்டு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மே மாதம் முதல் வாரத்திலிருந்து மே இறுதி வரை நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் புதுச்சேரி அரசு 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தது. ஆனால் தமிழ்நாட்டில் அத்தகைய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை தெளிவாக விளக்கமளித்துள்ளது. திட்டமிட்டபடி 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 6 முதல் மே 13 ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.