மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தும் காரணத்தால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்கப்படுவதாக, ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று இருந்த காரணத்தால் முழு ஊரடங்கு செலுத்தப்பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாளை (மே 2) அரசு பொது விடுமுறை அறிவிப்பு? வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை மக்களை வாட்டி எடுத்து வருகிறது. அதனால் தற்போது ஒடிசா மாநிலம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக, ஒடிசா மாநில கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வருகின்ற மே 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், அதே நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றும் ஒடிசா மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.