தமிழகத்தில் நாளை (மே 2) அரசு பொது விடுமுறை அறிவிப்பு? வலுக்கும் கோரிக்கை!
ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மே 2 அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகை:
இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்று ரமலான் நோன்பு இஸ்லாமிய காலண்டரில் படி 9-வது மாதம் ரமலான் ஆகும். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பர். அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், நீர் அருந்தாலும் இருப்பார்கள். பிறகு கடவுளை வழிபட்டு விட்டு இரவு நேரம் உணவை உட்கொள்வர். நோன்பு பிறை தெரிவதை அடிப்படியாக வைத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ரமலான் மாதத்தை நபிகள் நாயகம் ‘ஷஹ்ரே அஜீம்’ என்றும் ‘ஷஹ்ரே முபாரக்’ அதாவது ‘கண்ணியம் நிறைந்த அல்லது அருள் வளம் நிறைந்த மாதம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – விலை ரூ.102.50 அதிகரிப்பு!
ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் ரமலான் பண்டிகை நடப்பு ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதல் நோன்பு தொடங்கியது. மே 2ம் தேதி வரை நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மே 2ம் தேதி திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் மே 2 அன்றும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் வரும் ஏப்ரல் 30, மே 1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும் இவற்றிக்கு இடைப்பட்ட மே 2ம் அன்று திங்கட்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். ரமலான் திருநாளை கொண்டாட தங்களின் சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறையை இது செய்ய வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.