தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 2.30 வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசின் புதிய திட்டம்!
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து மீண்டும் வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் நேரம்:
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூலை 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஜூலை 1 முதல் பள்ளி நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது. இந்த முடிவிற்கு பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, ஹரியானா அரசு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி நேரத்தை முன்னதாகவே மாற்றியுள்ளது. கோடை விடுமுறைக்கு முன், ஹரியானா மாநிலத்தில் பள்ளிகள் தினசரி 5 மணிநேரம் மட்டும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp பயனாளர்களுக்கான புதிய அப்டேட் – 2 நாட்கள் வரைக்கும் Message Delete செய்து கொள்ளும் வசதி!
அதாவது மாநிலம் முழுவதும் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, அனைத்து பள்ளிகள் – அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து வகுப்புகளுக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டு மே 4 முதல் நடைமுறைக்கு வந்தது நாம் அறிந்ததே. இப்போது, அதே நேரத்தில் பள்ளிகளைத் தொடர அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரை பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் புதுப்பிக்கப்பட்ட நேரத்தைப் பின்பற்றவும், பள்ளிகளை மீண்டும் திறக்கும் போது தேவையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும் அரசு வலியுறுத்தியுள்ளது. ஹரியானா மற்றும் நாட்டின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் உள்ள பள்ளிகள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. ஆன்லைன் வகுப்புகள் காரணமாக உருவாகும் கற்றல் இடைவெளியை குறைக்க தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இப்போது முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.