7, 8ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 9 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு சண்டிகர் மாநிலத்தில் 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலையால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் கூடுதல் தளர்வுகள் அமலாகி உள்ளன. இதன் அடுத்தகட்டமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே எடுக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கி உள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகம் வர ‘இது’ கட்டாயம் – இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!
இதனை தொடர்ந்து தற்போது சண்டிகரில் 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறக்க சண்டிகர் நிர்வாகம் ஜூலை 19 முதல் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டாலும், மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படவில்லை. நேரடி வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் கலந்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
முகக்கவசம் அணிவது, சமூக தூரத்தை பராமரித்தல் மற்றும் அனைவரின் பாதுகாப்பிற்காக சானிடைசர்களைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்து விதிகளையும் நேரடி வகுப்புகளின் போது பின்பற்றுவது அவசியமாகும். மாணவர்கள் பள்ளிகளில் ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால், அவர்கள் பெற்றோரின் ஒப்புதலையும் பெற வேண்டும். இதற்கான விரிவான உத்தரவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்படும்.