தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை
திருச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த சமயபுரம் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்தவித நோயும் அண்டாமல் சகல சௌபாக்கியங்களுடன் குடும்பங்களுடன் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு அம்மன் இருபத்தி எட்டு நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பதை இந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சிறப்பாகும்.
நாடு முழுவதும் ஏப். 24 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு திட்டம்!
இந்த பச்சை பட்டினி விரதம் முடிந்ததுமே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று ஓரளவுக்கு தமிழகத்தில் குறைந்த காரணத்தினால் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற இருப்பதால் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திருவிழா வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தான் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்ட திருவிழா நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை தேர் திருவிழாவையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை அன்று திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்