நாடு முழுவதும் ஏப். 24 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு திட்டம்!
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழு ஊரடங்கு அமல்:
பல உலக நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் இருந்து தற்போது மீண்டு வரும் நிலையில் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் தான், பொதுமக்கள் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அங்கே தினமும் 12 மணி நேரம் மின்சார வெட்டு இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
மக்கள் தங்களது வாகனங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு கஷ்டமான சூழ்நிலைக்கு இலங்கையில் ஆளும் ராஜபக்சே குடும்பமே காரணம் என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் மறுபக்கம் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அதிபர் மாளிகை எதிரே 9வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!
மேலும் இதற்கு தினமும் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.