தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்களுக்கு 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான உதவி தொகை குறித்த அறிவிப்பை அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை விண்ணப்பம்:
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படும். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000 தொகையும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3,000 தொகையும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.4,000 தொகையும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000 உதவித்தொகையும், இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000 தொகையும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000 ம் உதவித்தொகையாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – ரயில் சேவைகள் ரத்து! தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
அதுமட்டுமில்லாமல் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு மற்றும் தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ. 3000 வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000, முதுகலை பட்டபடிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.6,000 வாசிப்பாளர் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் வேறு எந்த துறைகளிலும் உதவித்தொகை பெற்று வர கூடாது. இந்த உதவித்தொகை பெற தலைமையாசிரியர், கல்லூரி முதலமைச்சர் ஆகியோர் வழங்கிய சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் போன்றவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்