ஜூலை 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை? அரசு விளக்கம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது நகர்ப்புற கல்வி நிலையங்களை ஜூலை 10ம் தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகள் மூடல்
இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் நாட்டில் சுற்றுலாத் துறையில் இருந்து பெருபான்மையான வருமானம் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத் துறையில் வழக்கம் போல வருமானம் வந்து சேரவில்லை. ஆதலால் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த விலையேற்றத்தை கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நாட்டில் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது சில கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் வருகிற 10ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் பள்ளிகளுக்கு ஏற்கனவே 2 வாரம் விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வருகிற 10ம் தேதி வரை நகர்ப்புற கல்வி நிலையங்கள் மற்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை நிறுத்துவதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் நாட்டில் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.