ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 1226 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, ஊதியம் & முழு விவரங்களுடன்..!
SBI நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Circle Based Officers பணிக்கான காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | The State Bank of India |
பணியின் பெயர் | Circle Based Officers |
பணியிடங்கள் | 1226 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SBI பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, SBI வங்கியில் Circle Based Officers பணிக்கு 1226 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SBI வயது வரம்பு:
Circle Based Officers பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 எனவும் அதிகபட்சம் 30 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி அல்லது பணிக்கு தொடர்புடைய பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Join Our TNPSC Coaching Center
SBI ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.36,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
பொது/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.750/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.