Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்!
மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் வங்கிகளுக்கு இணையாக அதிகம் முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு 2015 ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்ச தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் பெண் குழந்தை பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தை தொடங்குவதற்கு பெண் குழந்தை வயது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும்
தமிழகத்தில் மார்ச் 4 பொது விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
இதனை தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டக் கணக்கு தொடங்கலாம். மேலும் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, குழந்தையின் படம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் படம், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை கணக்கு தொடங்குவதற்கு அவசியமானவை ஆகும். இந்த திட்டத்தில் சேமிப்பு தொகைக்கு ஆண்டு ஒன்றிற்கு 7.6% வட்டி அளிக்கப்படுகிறது.
திட்டத்தின் மதிப்பு தொகையில் 50% வைப்புத் தொகையை பெண் குழந்தையின் மேற்படிப்பிற்காக பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் முதிர்வு தொகையை பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது 21 வயது முடிந்தவுடன் பெற்றுக்கொள்ளலாம். மாதம் ஒருவர் ரூ.1000 சேமித்து வந்தால், முதிர்வு தொகையாக ரூ.5.09 லட்சம் பெறுவார். இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு வரி சலுகைகள் உண்டு. அதாவது, முதலீட்டுத் தொகை, வட்டி வருமானம், மெச்சூரிட்டி ஆகிய மூன்றுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கிறது.