EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடியிலிருந்து கணக்கை பாதுகாப்பது எப்படி? எச்சரிக்கை பதிவு!
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புயின் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு ஆன்லைன் மோசடிகளில் இருந்து கணக்கை பாதுகாப்பதற்கான வழிகளைப் EPFO பகிர்ந்துள்ளது. இதுதொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில் EPFO அமைப்பிலிருந்து உறுப்பினர்களை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களின் சுயவிவரம் போன்ற தகவல்ககளை ஒருபோதும் கேட்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.
பண இழப்பை தவிர்ப்பது எப்படி:
பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். இந்நிலையில் மோசடி கும்பல்களிடம் இருந்து தங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து , தற்போது EPFO தனது உறுப்பினர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் EPFO அமைப்பிலிருந்து உறுப்பினர்களை தொலைபேசி மூலம் அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாகவோ தொடர்புகொண்டு, ஆதார்,பான் கார்டு, வங்கி கணக்கு, ஓடிபி போன்ற தகவல்கள் ஒரு போதும் கேட்கப்படாது. எனவே முதலில் விவரங்களை சமூக ஊடங்களில் அல்லது OTP மூலம் தொலைபேசியில் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.
TNPSC காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 2022 – முக்கிய வெளியீடு | உடனே பாருங்க..!
.EPFO அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு போலியான அழைப்புகள் வந்தால் உங்கள் சுய விவரங்களை சொல்ல கூடாது என கூறியுள்ளது. இந்த மாதிரியான போலி அழைப்புகள் வந்தால் உடனடியாக EPFO அலுவலகத்திற்கு புகார் அளிக்க வேண்டும். எனவே EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என EPFO வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? உள்ளாட்சி தேர்தலுக்கு பின் வெளியாகும் அறிவிப்பு!
ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க, EPFO உறுப்பினர்கள் ஆவணங்களை DigilLocker ல் வைக்கலாம் உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணைக் கொண்டு DigiLocker இல் எளிதாக பதிவு செய்யலாம். நீங்கள் Digilocker ரில் வைத்திருக்க விரும்பும் ஆவணங்களைப் பதிவேற்றலாம். இந்த ஆவணங்களை PDF, JPEG மற்றும் PNG போன்ற பல்வேறு பைல்களில் பதிவேற்றலாம். இதுதவிர, E nomination செய்யலாம். அந்த வகையில் கடந்த மாதத்தில் 16 லட்சத்துக்கும் அதிகமான EPFO உறுப்பினர்கள் , E nomination செய்துள்ளனர்.