தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? உள்ளாட்சி தேர்தலுக்கு பின் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஊரடங்கு:
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் மக்களை பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு மக்கள் ஓரளவு பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தின் ஒரு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியது. இதனை கட்டுப்படுத்த முதல்வர் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தினார்.
மேலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது. அதனால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று மாநிலம் முழுவதும் 38 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் ஓமிக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த B A2 எனும் வைரஸ் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மறுபுறம் ஊரடங்கு இருக்காது இந்த தகவல்கள் போலியானது என்று அரசு அதிகாரி வட்டாரங்கங்கள் கூறுகின்றனர்.