TNPSC காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு 2022 – முக்கிய வெளியீடு | உடனே பாருங்க..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பதவிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது அதில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாற்றி அமைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 7 A:
குரூப்-VII-A சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள கிரேடு-I நிர்வாக அதிகாரி (Executive Officer, Grade-I) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்கு இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 4 – லிருந்து 25 ஆக மாற்றி அமைத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் வணிகத்தில் அல்லது சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து பாடத்திட்டத்தில் சில மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.