தமிழகத்தில் மார்ச் 4 பொது விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் அய்யா வைகுண்டா் உதய தினமான மாசி மாதம் 20 (நிகழாண்டு மாா்ச் 4) ஆம் நாள் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் நடைபெறும் சிறப்பான பண்டிகை, கோவில் திருவிழாக்கள் தியாகிகளின் நினைவு நாள் போன்றவைகளை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பண்டிகையை சிறப்பிக்க கொண்டாடும் வகையிலும், வெளி மாநில மற்றும் மாவட்ட மக்கள் வந்து கலந்து கொள்ளும் வகையிலும் இவ் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் தைபூசை திருவிழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
அதன் தொடர்ச்சியாக தற்போது அய்யா வைகுண்டர் உதய தினத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. ஆண்டுதோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து தாழக்கிடப்பாரை ‘தற்காப்பதுவே தாமம்‘ என்கிற நிலையில் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார்.
இதனால் ‘அய்யாவழி’ சமூகத்தினர் இவரை நினைவு கூறும் விதமாக அய்யா வைகுண்டர் உதய தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நாகர்கோவிலுக்கு வருகை புரிவர். இந்த தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் உதய தினமான மாசி 20 (மார்ச்.4) அன்று பொது விடுமுறை அளிக்குமாறும் இதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.