அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இதன் கீழ் பயனடைய விரும்புபவர்களுக்காக மேரா ரேஷன் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ள சேவைகள் குறித்து இப்பதிவில் காணலாம்.
மேரா ரேஷன்
பல்வேறு தொழில்கள் நிமித்தம் மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைக்க உதவுகிறது. அதாவது இத்திட்டம் மூலம் ஒரு நபர் இந்தியாவின் எந்தவொரு மூலைக்கும் சென்று ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது மத்திய அரசின் இந்த சேவைகளை, ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆப் மூலம் பெற்றுக்கொள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த சேவையை பெறுவதற்கான ஆப், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. முதலாவதாக மத்திய அரசின் மேரா ரேஷன் செயலி கடந்த 2019ம் ஆண்டில் 4 மாநிலங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் 32 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த செயலியானது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, PDS மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி அளிக்கிறது. இப்போது மேரா ரேஷன் செயலி பற்றி பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விவரங்களை காணலாம்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கூட்டுறவுத்துறை உத்தரவு!
அந்த வகையில் முதலாவதாக, மேரா ரேஷன் செயலி மூலம் பயனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் அருகில் இருக்கும் ரேஷன் கடை விவரங்களை பயனர்கள் அறிந்து கொள்ள முடியும். இது பயோமெட்ரிக் மூலமும் இயக்கப்படுகிறது. மேலும் NFSA பயனாளிகள் தங்கள் உணவு தானிய உரிமையை சரிபார்க்கலாம். தவிர கடந்த ஆறு மாத பரிவர்த்தனைகள் மற்றும் ஆதார் பதிவின் நிலையை சரிபார்க்கவும் மேரா ரேஷன் செயலி பயன்படுகிறது. இந்த மேரா ரேஷன் செயலி தமிழ், ஹந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் கிடைக்கிறது. இது முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் இயக்கப்படுகிறது.