மாநில அமைப்பு சாரா ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் ஊதிய உயர்வு!
பீகார் மாநில, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 15% உயர்த்தி வழங்க பீகார் குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
ஊதிய உயர்வு:
பீகார் மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை 15% உயர்த்தி வழங்க பீகார் குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த திட்டத்துடன் தொடர்புடைய மக்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இருந்து மாநில அரசு ஆலோசனைகளை கேட்டுள்ளது. மேலும் புதிய ஊதியம் அமலுக்கு வந்தால், பீகாரில் ஒரு தொழிலாளிக்கு தற்போது உள்ள தினசரி ஊதியமான ரூ.318 ஐ விட ரூ.48 கூடுதலாக வழங்கப்படும். அடுத்த 2 மாதங்களில் மாநிலத்தில் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும்.
ரயில்களில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
பீகார் தொழிலாளர் வளத்துறை அமைச்சர் ஜிபேஷ் குமார் கூறியது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற மாநில குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. அப்போது, மாநில அரசால் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.366 பெறுவார் என்று அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தால் அமைப்புசாரா துறையில் உள்ள சுமார் 3 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
Exams Daily Mobile App Download
பீகாரைச் சேர்ந்த மொத்தம் 2,82,53,941 தொழிலாளர்கள் இதுவரை மத்திய அரசால் தொடங்கப்பட்ட இ-ஷ்ரம் போர்ட்டலில் தங்களைப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த தொழிலாளர்களுக்கு விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக பீகார் 2 வது இடத்தில் உள்ளது, மொத்தம் 8.28 கோடி தொழிலாளர்கள் இந்த போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். மேலும் மேற்கு வங்கம் 2.55 கோடி தொழிலாளர்களுடன் 3வது இடத்தில் உள்ளது. பதிவின் அடிப்படையில் பீகார் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 80.75 சதவீதத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.