HCL Tech நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான HCL ரஷ்ஷர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது ஹெச்சிஎல் டெக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கு புதிய சம்பள உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
HCL:
இந்தியாவின் தற்போதைய நிலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளும் நடைபெற்று வந்த நிலையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் தேவை மக்களுக்கு அதிகரித்தது. இதனால் மக்களுக்கு சேவைகளை வழங்க ஐடி துறை ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. கிட்டத்தட்ட 400 % அளவில் ஐடி பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டது.
இது வேலை வாய்ப்புகளை தேடி வந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. பொறியியல் பட்டம் பெற்றவர்கள், பிஎஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு ஐடி நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க முன் வந்தனர். இதன் மூலம் ஏராளமானோர் ஐடி துறையில் பணியில் சேர்ந்தனர். இந்த நிலையில் பிரபல நிறுவனமான எச்சிஎல் டெக் நிறுவனம் 2022ஆம் நிதியாண்டில் நிறுவனத்தில் சேரும் பிரஷ்ஷர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ExamsDaily Mobile App Download
ரஷ்ஷர்களுக்கு அளிக்கப்படும் வருடாந்திர சம்பளமான 3.5 லட்சம் ரூபாயில் இருந்து 4.25 லட்சம் ரூபாயாகா உயர்த்தப்பட்டு உள்ளது. அறிவிப்பு மூலம் ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேரும் பிரஷ்ஷர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய சம்பள உயர்வு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். ஹெச்சிஎல் நிறுவனத்தை தொடர்ந்து பிற ஐடி நிறுவனங்களும் சம்பள உயர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.