CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2023ம் கல்வியாண்டு பாடத்திட்டம் வெளியீடு! ஒரே முறையில் தேர்வு!
CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான 2022-23ம் கல்வியாண்டு பாடத்திட்டங்களை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், இம்முறை இறுதித் தேர்வுகள் ஒரே முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
CBSE பாடத்திட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வரவிருக்கும் 2022-23 கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டை போலவே 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இரட்டை இறுதி தேர்வுகள் அடுத்த ஆண்டில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா பரவலை முன்னிட்டு CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் பிரிக்கப்பட்டது. அதன்படி, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இரண்டு தவணைகளாக இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – நாளை மறுநாள் செய்முறை தேர்வு தொடக்கம்!
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் பருவத் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ம் தேதியன்று தொடங்க இருக்கிறது. ஆனால் புதிய கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கத்தை போல ஆண்டு இறுதித் தேர்வு ஒரே முறையில் நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘2020-21 கல்வி அமர்வில், எந்த வாரியத் தேர்வுகளும் நடக்காததால் மாற்று மதிப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டி இருந்தது.
ExamsDaily Mobile App Download
இதனால் தொற்றுநோயால் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டு முறை வாரியத் தேர்வுகளை நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இப்போது பள்ளிகள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்து மிகவும் ஊக்கமளிப்பதாக இல்லை என்பதால் தேர்வு முறையை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.