மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசின் முடிவு என்ன?
ஆந்திரா மாநிலம் சித்தூரில் 11வது சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம வருவாய் உதவியாளர்கள் சேர்ந்து முட்டி போட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கும் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பொதுவாக அரசு ஊழியர்கள் பலரும் சம்பள உயர்வு உள்ளிட்ட சில காரணங்களுக்காக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ஆந்திரா மாநிலம் சித்தூரில் கிராம வருவாய் உதவியாளர்கள் நடத்திய போராட்டம் மக்களிடம் இருந்து கவனம் பெற்று வருகிறது. அதாவது, 11வது சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம வருவாய் உதவியாளர்கள் சித்தூரில் நேற்று (பிப்.22) நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு விளக்கம்!
அந்த வகையில் சங்க மாவட்ட தலைவர் கோதண்டன் தலைமையின் கீழ், சித்தூர் மண்டல வருவாய் துறை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகள் முட்டி போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அலுவலர்கள், ‘சமீபத்தில் ஆந்திர மாநில அரசு அறிவித்த 11வது சம்பள உயர்வில் கிராம வருவாய்த்துறை உதவியாளர்களுக்கு எவ்வித அறிவிப்புக்கு கொடுக்கப்படவில்லை.
இது மிகுந்த வருத்தத்தை கொடுத்திருந்தது. நாங்கள் கிராம வருவாய்த்துறை உதவியாளர்களாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். நிலங்களை பாகப்பிரிவினை செய்யும் போது அரசுக்கு வருவாயும் ஈட்டித் தருகிறோம். ஆனால் எங்களுக்கு எவ்விதமான சம்பள உயர்வும் கிடைக்கவில்லை. இதுவரை ரூ.10,000 மட்டுமே சம்பளமாக பெற்று வருகிறோம். எங்களது குழந்தைகளின் கல்விக்கு கூட இந்த பணம் போதவில்லை.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!
இது தவிர கடந்த 6 மாதங்களாக DA வழங்கப்படவில்லை. மேலும், நிலங்களை அளப்பதற்காக ஆட்டோக்களிலும், பஸ்களிலும் செல்ல நேரிடுவதால் இதற்கு ரூ.1000 வரை செலவு ஏற்படுகிறது. அதனால் எங்களுக்கு மாதம் ரூ.26,000 சம்பளமாக தர வேண்டும். அதே போல் வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா, தகுதிக்கு ஏற்ப பணி உயர்வும் வழங்க வேண்டும். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.