சென்னை: தங்க நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அதிரடியாக குறைந்த விலை! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் மாறிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.
தங்கத்தின் விலை குறைவு
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்களிடையே பல்வேறு பொருளாதார ரீதியான பிரச்சனை ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க முடிவு செய்தனர். இதில் குறிப்பாக தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வந்தனர். ஏனெனில் வங்கிகளில் மற்ற கடன்களை விட நகைக்கடனுக்கு குறைந்த வட்டித்தொகை வசூலிக்கப்படுகிறது. மேலும் வெளிநாட்டினர்களும் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை செலுத்தி வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! அரசின் முடிவு என்ன?
அதனால் தங்கத்தின் விலையிலும் உயர்வு ஏற்பட்டது. ஆனாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் இந்த வாரத்தில் 3 நாட்கள் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,720 ரூபாயாகவும் அத்துடன் ஒரு சவரன் 38,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு விளக்கம்!
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4735 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69க்கும் ஒரு கிலோ வெள்ளி 69000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் வெள்ளி 30 பைசா குறைந்துள்ளது. அதன்படி இன்று ஒரு கிராம் 68.70 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 68700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.