மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு விளக்கம்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழலை ஆய்வு செய்து அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்கி, கொரோனா தொடர்பான அனைத்து பராமரிப்பு மையங்களையும் மூடும்படிக்கு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச மாநில அரசு தற்போது இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, இம்மாநிலத்தில் கொரோனா தொற்றுநோய் முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதல்வர், ஊரடங்கு உள்ளிட்ட சில கொரோனா தொடர்புடைய கட்டுப்பாடுகளை நீக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹோலி மற்றும் ரங்கபஞ்சமி உள்ளிட்ட பண்டிகைகளின் போது மக்கள் எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு கட்டுபாடுகள் தளர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்.28ம் தேதி முதல் தொடக்கம்!
என்றாலும் மக்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடத்தையை பின்பற்றவும், முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வேண்டும். அது போல கொரோனா பராமரிப்பு மையங்கள் இப்போது முழுமையாக மூடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் ஒரு வார்டு கொரோனா நோயாளிகளுக்காக காலியாக வைக்கப்பட வேண்டும்.
தமிழக இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வென்டிலேட்டர்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். அவை தேவைப்படும்போது பயன்படுத்தப்படும். இதனுடன் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் லைன்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். இப்போது அம்மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்து வருகின்றன வேளையில், நேர்மறை விகிதம் 1.2% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று (பிப்.22) ஒரு நாளில் கொரோனா புதிய நோய்த்தொற்றுகள் 521 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.