தமிழகத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயரும் சம்பளம் – அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

0
தமிழகத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயரும் சம்பளம் – அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதைப் போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகியவற்றின் காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது.

தமிழகத்தில் 2வது நாளாக 144 தடை உத்தரவு – மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி உயர்வினை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தற்போதைய அறிவிப்பின்படி 4% அகவிலைப்படி உயர்வால், அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 எனில் ஊழியரின் அகவிலைப்படி 10,710 ஆக உயரும். அதாவது, ஊழியருக்கு ரூ.1,020 கூடுதல் சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!