தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தால் போதும்…! இந்து சமய அறநிலை துறையில் வேலை ரெடி!

0
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தால் போதும்...! இந்து சமய அறநிலை துறையில் வேலை ரெடி!
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தால் போதும்...! இந்து சமய அறநிலை துறையில் வேலை ரெடி!
தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தால் போதும்…! இந்து சமய அறநிலை துறையில் வேலை ரெடி!

ஈரோடு மாவட்டம்‌ அருள்மிகு சோழீஸ்வரர்‌ திருக்கோயில்‌ காவேரிக்கரையில் காலியாக உள்ள அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர் மற்றும் திருவலகு ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அருள்மிகு சோழீஸ்வரர்‌ திருக்கோயில்‌
பணியின் பெயர் அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர் மற்றும் திருவலகு
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
திருக்கோயில்‌ காலிப்பணியிடங்கள்:

அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர் மற்றும் திருவலகு ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அர்ச்சகர் கல்வி தகுதி:

தமிழில்‌ படிக்கவும்‌ எழுதவும்‌ அறிந்திருக்க வேண்டும்‌. சமய அறநிறுவனங்கள்‌ அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள்‌ நடத்துகின்ற ஏதேனும்‌ ஆகமப்பயிற்சி மையத்தில்‌ தொடர்புடைய பிரிவில்‌ ஒராண்டு பயிற்சிக்கான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

சீட்டு விற்பனையாளர் கல்வி தகுதி:

பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால்‌ இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இரவுக்காவலர் மற்றும் திருவலகு:

தமிழில்‌ படிக்கவும்‌ எழுதவும்‌ தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • அர்ச்சகர்: ரூ.3000/-
  • சீட்டு விற்பனையாளர்: ரூ.3100-9300 Pay Matrix Level – 3
  • இரவுக்காவலர்: ரூ.2300-7400 Pay Matrix Level – 1
  • திருவலகு : ரூ.2300-7400 Pay Matrix Level – 1
வயது வரம்பு:

01.07.2023 அன்று விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழகத்தில் அகவிலைப்படி ரூ.10,710 உயரும் சம்பளம் – அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!