தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு? முதன்மை செயலாளர் கடிதம்!

0
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு? முதன்மை செயலாளர் கடிதம்!
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு? முதன்மை செயலாளர் கடிதம்!
தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு? முதன்மை செயலாளர் கடிதம்!

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசு முதன்மை செயலாளர், தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஊதிய உயர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள், நடப்பு ஆண்டில் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி இடைவெளியை போக்கும் வகையில் தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் தற்போதைய கல்வித்துறையும் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வருகைக்கு பின் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருப்பதால், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு அண்மையில் வெளியானது. அந்த வகையில் அதிகபட்சமாக ரூ.65,500 வரை சம்பளம் பெறும் ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மனு பிறப்பித்தார்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இனி 24 மணிநேரமும் சேவைகள்!

அந்த மனுவில்‘தமிழகத்தில் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் தொட்டியம் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோரின் செயல்முறைகளில் ஊதிய விகிதத்தில் உச்ச நிலையான ரூ.65,500ஐ அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அனுமதிக்க மறுத்து வருடாந்திர ஊதிய உயர்வினை ரத்து செய்தது குறித்து ஆசிரியர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் பல்வேறு வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.

அதனால், பதவி உயர்வு எதுவும் இன்றி ரூ.20,600 முதல் ரூ.65,500 என்ற ஊதிய விகிதத்தில் அதிகபட்ச ஊதிய நிலையான ரூ.65,500 பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கலாம். அந்த வகையில் ரூ.65,500 வரை சம்பளம் பெறும் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊதிய விகிதத்தில் உச்ச நிலை ரூ.65,500 ஐ அடைந்தவர்களுக்கு ஊதிய விகிதம், ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை எண் .90 படி( திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் ரூ.20,600 – 75,000 ) வருடாந்திர ஊதிய உயர்வினை அனுமதித்தல் தொடர்பாக அரசு முதன்மை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!