மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் திருத்தப்பட்ட விகிதத்தில் சம்பளம் அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஊதிய திருத்தமானது 11 வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊதிய விகிதம்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அரசு அமைத்துள்ள ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் கீழ் ஊதியம் அளித்து வருகிறது. அரசின் அனைத்து செயல்பாடுகளும் அரசு ஊழியர்களின் பணியை பொறுத்து தான் உள்ளது என்ற காரணத்தால் அனைத்து அரசுகளும் தங்களின் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய சலுகைகளை விரைந்து வழங்க தீவிரம் காட்டப்படும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு பணபலன்கள் அதிகரித்து வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டது.

IND vs SA 2வது ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

தற்போது தான் கொரோனா நிலைமை சீரடைந்து வந்ததை அடுத்து அரசு ஊழியர்களுக்கு அவர்களின் படிகளை உயர்த்தி வழங்கி அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆந்திர மாநில அரசு தனது ஊழியர்களுக்கு 11வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களை அமல்படுத்த இருப்பதாக நேற்று உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களின் படி ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான நடைமுறை வழிமுறைகளை நிதித்துறை வெளியிட்டுள்ளது. முன்னதாக புதிய ஊதிய விகிதத்தின் படி சம்பளம் வழங்கவும், பழைய ஊதிய விகிதத்தை தொடர வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!

இதன் விளைவால் ஆந்திர மாநில அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் படி சம்பளம் பிப்ரவரியில் வழங்கப்படும் என்று அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் ஷம்ஷர் சிங் ராவத் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஊதிய நிர்ணயத்தை எளிமையாக மாற்ற APCFSS ஆல் உருவாக்கப்பட்ட புதிய HRMS மென்பொருளை பயன்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதனுடன் நிலுவையில் உள்ள ஐந்து அகவிலைப்படி தவணைகளையும் பிப்ரவரியில் செலுத்துவதற்கான ஆணைகள் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!