தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 1 முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து சில மாதங்களுக்கு முன் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் HRA மற்றும் DA 3% உயர்வு – முக்கிய விவரங்கள்!

அதனால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது. அதனால் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் வருகிற பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடியாக சுழற்சி முறையில் தேர்வுகள் நடத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி அடிப்படையில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள்ம் பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா பரவலை பொறுத்து நேரடி வகுப்புகள் குறித்து முடிவு செய்யப்படும். மேலும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகளை நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு:
  • ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.
  • கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும்.
  • ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம்.
  • கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!